search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மங்கலம் - சாமளாபுரம் சாலை புதுப்பிப்பு பணி

    நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக இருந்த பகுதிகள் சீராகிவிட்டதாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    மங்கலம்:

    அவிநாசி நெடுஞ்சாலை உட்கோட்ட எல்லையில் உள்ளது மங்கலம் - சாமளாபுரம் நெடுஞ்சாலை ரோடு. ரோடு அமைத்த பின் குழாய் பதிப்பு பணிகள் நடந்தன. இந்நிலையில் ரோடு புதுப்பிப்பு பணி நடந்து வருகிறது. சாமளாபுரத்தில் இருந்து மங்கலம் வரை ரோடு புதுப்பிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக இருந்த பகுதிகள் சீராகிவிட்டதாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் மங்கலத்தில் இருந்து சாமளாபுரம் வரை சரியான மழைநீர் வடிகால் வசதியில்லை.

    இதனால் 8 இடங்களில், மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாததால் ரோட்டில் மழைநீர் தேங்கி நிற்பதால், விரைவில் ரோடு பழுதாகும் அபாயம் உள்ளது.

    நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து ரோட்டில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில், மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×