search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆபத்தான நிலையில் இருந்த மின்வயர் சீரமைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    ஆபத்தான நிலையில் இருந்த மின்வயர் சீரமைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    மாலைமலர் செய்தி எதிரொலியாக கடையம் அருகே ஆபத்தான மின்வயர் சீரமைப்பு

    கடையம் அருகே தோரணமலை செல்லும் மெயின் ரோட்டில் ஆபத்தான நிலையில் இருந்த மின்வயர் மாலைமலர் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டுள்ளது.
    கடையம்:

    கடையம் அருகே தோரணமலை செல்லும் மெயின் ரோட்டில் தெற்கு பகுதியில் உயர்அழுத்த மின்சார வயர்களை பழுது பார்க்கும் போது வீடுகளுக்கு செல்லும் கேபிள் டி.வி. வயருடன் சேர்த்து இழுத்துக்கட்டப்பட்டுவிட்டது. இதனால் 2 வயர்களும் பின்னிப் பிணைந்து காணப்பட்டது.

    இதனால் வீடுகளுக்கு செல்லும் இணைப்பில் மின்சாரம் செல்ல வாய்ப்புள்ளதாகவும் எனவே அசம்பாவிதம் நிகழும் முன் இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மாலைமலரில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.

    இந்நிலையில் உடனடியாக  அதனை சரிசெய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் ஆவுடையானூர் துணைமின்நிலைய ஊழியர்கள் ஆபத்தான நிலையில் காணப்பட்ட மின்வயர்களை பிரித்து அகற்றினர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×