search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீ வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்.
    X
    தீ வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்.

    கோவில்பட்டியில் வியாபாரியின் 2 பைக்குகளுக்கு தீ வைப்பு

    கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்ற வியாபாரியின் 2 மோட்டார் சைக்கிள்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 3&வது மேலத்தெருவில் குடியிருந்து வருபவர் கருப்பசாமி (வயது 54). இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு கோவில்பட்டி வந்துள்ளார். தற்போது அவர் தீப்பெட்டி மூலப்பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார்.

    இவரது மகன் பூல் பாண்டியன் (31). வழக்கம் போல் நேற்று இரவு பணிகளை முடித்து விட்டு கருப்பசாமி, பூல்பாண்டியன் குடும்பத்தினர் அனைவரும் தூங்கி விட்டனர்.

     இரவு சுமார் 2 மணி அளவில் வீட்டு முன்பு சத்தம் கேட்டுள்ளது. வெளியே வந்து பார்த்தபோது அவர்களது 2 மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×