search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது- அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

    வரும் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் பணிக்கு வந்தோர், வராதோர் பட்டியலை துறைவாரியாக அனுப்பி வைக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுவது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தும், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்  மத்திய அரசு ஊழியர்கள் வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலை நிறுத்தத்துக்கு தி.மு.க., இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

    இந்த நிலையில், வரும் 28 மற்றும் 29 ஆம் தேதி பணிக்கு வராத தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை என்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அறிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுக்கும் அவர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். 

    வரும் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் பணிக்கு வந்தோர், வராதோர் பட்டியலை துறைவாரியாக அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

    இதேபோல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அறிவித்துள்ளது. மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×