என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தமிழகம் முழுவதும் நாளை 26-வது மெகா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்25 March 2022 7:14 AM GMT (Updated: 25 March 2022 9:02 AM GMT)
தமிழகத்தில் 26-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை (சனிக்கிழமை) 50 ஆயிரம் மையங்களில் நடக்கிறது. 1 லட்சத்திற்கும் மேலான சுகாதார பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கியது. ஒவ்வொரு வயது பிரிவினருக்கும் தனித்தனியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
18 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு பல்வேறு கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.
இதுவரையில் 10 கோடியே 6 லட்சத்து 29 ஆயிரத்து 631 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 18 முதல் 44 வயதுள்ள பிரிவுகளில் 5 கோடியே 10 லட்சத்து 31 ஆயிரத்து 421 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இன்னும் 2 தவணை தடுப்பூசி போடாமல் ஒரு கோடியே 25 லட்சம் பேருக்கு மேல் உள்ளனர். முதல் தவணை தடுப்பூசி போடாமல் 50 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டாமல் இருப்பது சுகாதாரத்துறையை கவலை அடைய செய்துள்ளது.
சென்னையில் முதல் தவணை 98 சதவீதமும், 2-வது தவணை 87 சதவீதமும் போடப்பட்டுள்ளது. இதுவரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களும், 2-வது தடுப்பூசி போடும் தகுதி வாய்ந்தவர்களும் உடனே செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 26-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை (சனிக்கிழமை) 50 ஆயிரம் மையங்களில் நடக்கிறது. 1 லட்சத்திற்கும் மேலான சுகாதார பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள்.
மெகா சிறப்பு முகாம்களில் முன்பு 20 லட்சம் பேர் வரை தடுப்பூசி செலுத்தினர். தற்போது இந்த எண்ணிக்கை படிப்படியாக 5.5 லட்சமாக குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கியது. ஒவ்வொரு வயது பிரிவினருக்கும் தனித்தனியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
18 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு பல்வேறு கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.
இதுவரையில் 10 கோடியே 6 லட்சத்து 29 ஆயிரத்து 631 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 18 முதல் 44 வயதுள்ள பிரிவுகளில் 5 கோடியே 10 லட்சத்து 31 ஆயிரத்து 421 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இன்னும் 2 தவணை தடுப்பூசி போடாமல் ஒரு கோடியே 25 லட்சம் பேருக்கு மேல் உள்ளனர். முதல் தவணை தடுப்பூசி போடாமல் 50 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டாமல் இருப்பது சுகாதாரத்துறையை கவலை அடைய செய்துள்ளது.
சென்னையில் முதல் தவணை 98 சதவீதமும், 2-வது தவணை 87 சதவீதமும் போடப்பட்டுள்ளது. இதுவரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களும், 2-வது தடுப்பூசி போடும் தகுதி வாய்ந்தவர்களும் உடனே செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 26-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை (சனிக்கிழமை) 50 ஆயிரம் மையங்களில் நடக்கிறது. 1 லட்சத்திற்கும் மேலான சுகாதார பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள்.
மெகா சிறப்பு முகாம்களில் முன்பு 20 லட்சம் பேர் வரை தடுப்பூசி செலுத்தினர். தற்போது இந்த எண்ணிக்கை படிப்படியாக 5.5 லட்சமாக குறைந்துள்ளது.
நாளை நடைபெறும் முகாம்களில் தகுதி உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டு நோய் தொற்றில் இருந்து இனி வரும் காலங்களில் பாதுகாத்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னையில் 1,600 மையங்களில் இந்த முகாம்கள் நடக்கிறது.
இதையும் படியுங்கள்... உக்ரைன் போர் களத்தில் இருந்து ‘சிம்பா’ சிங்கம் பாதுகாப்பாக வெளியேற்றம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X