search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சுரண்டையில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

    சுரண்டை அருகே உள்ள மருதபுரத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் மின்சாரம் தாக்கி பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சுரண்டை:

    சுரண்டை அருகே உள்ள மருதபுரத்தை சேர்ந்தவர் தாவீது. இவரது மனைவி எமிலி ராஜம்மாள்(வயது 65).  இவரது மகன் மற்றும் மகள்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். நேற்று எமிலி ராஜம்மாள் தனது மகள் வீட்டுக்கு சென்று சாப்பாடு வாங்கி கொண்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது அவரது வீட்டின் அருகே உள்ள மின்கம்பத்தில் அவர் கை வைத்துள்ளார்.

    இதில் எதிர்பாராதவிதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. தூக்கி வீசப்பட்ட அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அவரது மகன் ஜெயக்குமார் அளித்த புகாரின்பேரில் சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×