search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சசிகலா,   ஜெயக்குமார்  (கோப்புபடம்)
    X
    சசிகலா, ஜெயக்குமார் (கோப்புபடம்)

    சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைக்க வாய்ப்பு இல்லை- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

    கட்சியில் ஒரு நிலைப்பாடு, ஆட்சியில் ஒரு நிலைப்பாடு என தி.மு.க.வினர் முரண்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    திருச்சி:

    தி.மு.க. தொண்டர் தாக்கப்பட்ட வழக்கில் கைதாகி,  நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்ற உத்தரவின் பேரில்,  திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் நேற்று 5வது முறையாக கையெழுத்திட்டார். 

    பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

    மற்ற மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்த போதும், தி.மு.க. அரசு குறைக்கவில்லை. 

    மாநில அரசுகள் திட்டங்களை செயல்படுத்துவதில் நிதி பற்றாக்குறை ஏற்படும் என்பதால் பெட்ரோல், டீசல் ஆகியவற்றினை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர கூடாது என்பதில் ஜெயலலிதா உறுதியான நிலைப்பாடு எடுத்தார். ஆனால் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவோம் என்று சொன்னது. 

    கட்சியில் ஒரு நிலைப்பாடும், ஆட்சியில் ஒரு நிலைப்பாடும் என்று தி.மு.க.வினர் முரண்பட்டு இருக்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி கூடுதலாக 3 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்து விட்டார். 

    2026-ல் கூடுதலாக 10 சதவீத வாக்குகளைப் பெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். சசிகலாவை அ.தி.மு.க.வில் மீண்டும் இணைக்க வாய்ப்பு இல்லை. சசிகலாவை நீக்கியது கட்சி எடுத்த முடிவு. 

    நேற்றும் சரி, இன்றும் சரி, நாளையும் சரி ஒரே முடிவு தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×