என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாளை அருகே குளத்தில் மீன்பிடித்த முதியவர் நீரில் மூழ்கி பலி
Byமாலை மலர்22 March 2022 9:50 AM GMT (Updated: 22 March 2022 9:50 AM GMT)
பாளை அருகே குளத்தில் மீன்பிடித்த முதியவர் நீரில் மூழ்கி பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளை அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் காட்வின் ஆபேல் (வயது 61).
நேற்று இவர் ஆச்சி மடம் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் நேற்று இரவு அவரது உறவினர்கள் அந்த குளத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது காட்வின் ஆபேலின் உடமைகள் அனைத்தும் கரையில் இருந்தது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று கூறி சிவந்திப்பட்டி போலீசில் புகார் செய்தனர்.
சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று பார்வையிட்டனர். குளத்தில் சில பகுதிகளில் இறங்கி தேடிப்பார்த்தனர். ஆனால் காட்வின் ஆபேல் உடல் எங்கும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை அந்த குளத்தின் கரையில் அவரது உடல் பிணமாக கிடந்தது. சம்பவ இடத்துக்கு சிவந்திபட்டி போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள்.
மேலும் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாளை அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் காட்வின் ஆபேல் (வயது 61).
நேற்று இவர் ஆச்சி மடம் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் நேற்று இரவு அவரது உறவினர்கள் அந்த குளத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது காட்வின் ஆபேலின் உடமைகள் அனைத்தும் கரையில் இருந்தது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று கூறி சிவந்திப்பட்டி போலீசில் புகார் செய்தனர்.
சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று பார்வையிட்டனர். குளத்தில் சில பகுதிகளில் இறங்கி தேடிப்பார்த்தனர். ஆனால் காட்வின் ஆபேல் உடல் எங்கும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை அந்த குளத்தின் கரையில் அவரது உடல் பிணமாக கிடந்தது. சம்பவ இடத்துக்கு சிவந்திபட்டி போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள்.
மேலும் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X