search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    காவிரி ஆற்றில் கர்நாடகா மேகதாது அணை- பாராளுமன்றத்தில் திருமாவளவன் ஒத்திவைப்பு தீர்மானம்

    தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டக்கூடாது என காவிரி தீர்ப்பாயமும், உச்சநீதிமன்றமும் ஆணை பிறப்பித்திருக்கிற நிலையில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கியுள்ளது.
    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார்.

    “தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டக்கூடாது என காவிரி தீர்ப்பாயமும், உச்சநீதிமன்றமும் ஆணை பிறப்பித்திருக்கிற நிலையில், கர்நாடக அரசு அந்த ஆணையை மீறும் வகையில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தனது நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கியுள்ளது.

    ஒன்றிய அரசும் இதனை ஊக்கப்படுத்துகிறது. இது வெளிப்படையாக தமிழக மக்களுக்கு இழைக்கப்படுகிற துரோகம். பாராளுமன்றத்தில் மற்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு இதனை உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    Next Story
    ×