search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    காட்டுப்புத்தூர் அருகே இளம் பெண் மாயம்

    காட்டுப்புத்தூர் அருகே இளம் பெண் மாயமானார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம்தொட்டி யத்தை அடுத்த  காட்டுப்புத்தூர் வி.எஸ்.நகரில் வசிப்பவர் வேல்முருகன் வயது 40. இவர்  மெக்கானிக்காக பணிபுரிந்து   வருகிறார்.

    இவரது மனைவி அமுதா வயது 38. இவர் காட்டுப்புத்தூர் அருகே உள்ள சீத்தப்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில்  கணக்காளராக பணி புரிந்து வருகிறார்.

    இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று அமுதா 100 நாள் வேலை பணிக்காக சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    அவரை பல  இடங்களில் வேல்முருகன்   தேடினார், ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து வேல்முருகன் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின்பேரில் சப்இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்குப் பதிவு செய்து மாயமான அமுதாவை தேடி வருகிறார்.
    Next Story
    ×