search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    விஷம் சாப்பிட்டு பெண் சாவு

    விஷம் சாப்பிட்டு பெண் இறந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் கல்லக்குடி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம் கல்லக்குடி பேரூராட்சி சமத்துவபுரத்தை  சேர்ந்தவர் செல்வம் மனைவி லீலா (வயது43). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனது வீட்டில் இருந்த எலி மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை  உறவினர்கள் மீட்டு, அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் அங்கு அவர்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கல்லக்குடி உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்.
    Next Story
    ×