search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுப்புராஜ்
    X
    சுப்புராஜ்

    திண்டுக்கல் அருகே கிணற்றில் ஆண் பிணம் மீட்பு

    திண்டுக்கல் அருகே கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட கூலித்தொழிலாளி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள  சிங்கார கோட்டையைச் சேர்ந்த சுப்புராஜ் (வயது 50). கூலித் தொழிலாளி. குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். கடந்த வாரம் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் இன்று சாலை புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் தீயணைப்புதுறையினர் உதவியுடன் அவரது உடலை மேலே  கொண்டு வந்து விசாரணை நடத்தியதில் அவர் சுப்புராஜ் என உறுதி செய்யப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×