search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி
    X
    தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி

    31-ம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி- அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

    மார்ச் 31-ம் தேதிக்குள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பு தங்க நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், கூட்டுறவு வங்கிகளில் 5 லட்சத்துக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தது.

    இதன் கீழ் வரும் வாடிக்கையாளர்களின் பட்டியலையும் தயாரித்து, தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான செயலிலும் அரசு ஈடுபட்டது.

    இந்நிலையில், வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பு தங்க நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதுகுறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது:-
    14.40 லட்சத்து பயனாளிகளுக்கும் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொது நகைக்கடன் வரும் 31-ம் தேதிக்குள் தள்ளுபடி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×