search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பணம்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன்
    X
    கோப்பணம்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன்

    பரமத்திவேலூர் பகுதிகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை

    பரமத்திவேலூர் பகுதிகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.


    பரமத்திவேலூர்:

    பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம் பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் நன்செய் இடையாறு மகாமாரியம்மன், பரமத்திவேலூர் மாரியம்மன், செல்லாண்டியம்மன், கொந்தளம் மாரியம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதியம்மன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.


    Next Story
    ×