என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து உயிருக்கு போராடிய பசுமாடு- தண்ணீர் நிரப்பி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த தட்பெரும்பாக்கம் பகுதியில் பசுமாடு ஒன்று துரைசாமி நகர் வழியாக சென்றது. ஒரு வீட்டின் அருகே சென்ற போது அருகில் இருந்த கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது.
இதில் பசுமாட்டின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கழிவுநீர் தொட்டி குறுக்கே இருந்ததால் பசுமாட்டால் வெளியே வரமுடிய வில்லை.
இதனால் பசுமாடு உயிருக்கு போராடியபடி கத்தியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கழிவுநீர் தொட்டிக்குள் சிக்கிய பசுமாட்டை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இது பற்றி பொன்னேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பசுமாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 10 அடிக்கு கீழ் இருந்த பசுமாட்டை மேலே கொண்டு வருவதற்காக கழிவுநீர் தொட்டிக்குள் தண்ணீரை ஊற்றி நிரப்பினர். இதன் பின்னர் தண்ணீரில் மிதந்தபடி பசுமாடு ஓரளவு மேலே வந்தது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பத்தி ரமாக பசுமாட்டை கயிறு கட்டி மீட்டனர். கழிவு நீர் தொட்டிக்குள் சிக்கிய பசுமாட்டை வேகமாக மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்