search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூளகிரி அருகே குந்தாரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் செடிகள்  தீ பிடித்து எரியும் காட்சி.
    X
    சூளகிரி அருகே குந்தாரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் செடிகள் தீ பிடித்து எரியும் காட்சி.

    சூளகிரியில் சாலையோரம் செடிகளுக்கு தீ வைப்பு

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் சாலையோரம் உள்ள செடிகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    சூளகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், -சூளகிரி தாலுகா சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மாதமாக வழக்கத்திற்கு மாறாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 

    இதனால் விவசாயிகள் விளை நிலங்களுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் அவதிபடுகின்றனர்.

    தண்ணீரின்றி நெடுஞ்சாலை ஒரமாக காய்ந்த செடி களுக்கு தீ கொளுத்தி விடுகின்றனர். இதனால் சாலை ஒரமுள்ள வீடுகள் பெட்ரோல் பங்க், தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் எளிதில் தீ பிடிக்கும் கேஸ் லாரி, கெமிக்கல் லாரி மற்றும் வாகனங்கள் தீயை கண்டு பீதியில் டிரைவர்கள் சென்று வருகின்றனர். சூளகிரி தாலுகாவிற்கு தீயணைப்பு நிலையம் இல்லை -என்பது குறிப்பிடதக்கது.

    Next Story
    ×