என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு மருத்துவமனையில் பெண் நோயாளியிடம் நகை திருட்டு
Byமாலை மலர்17 March 2022 9:51 AM GMT (Updated: 17 March 2022 9:51 AM GMT)
அரசு மருத்துவமனையில் பெண் நோயாளியிடம் நகை திருட்டு போன சம்பவத்தில் போலீசார் விசாரணை
திருச்சி:
திருச்சி துறையூர் எ.கீழபட்டி, நடுத்தெருவை சேர்ந்தவர் வளர்மதி (வயது 44). இவரின் மகள் பிரியங்கா உடல்நலம் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
மகளை அவரது தாயார் உடனிருந்து கவனித்து வந்தார். படுக்கையில் இருந்த காரணத்தால் பிரியங்காவின் 7 அரை பவுன் தங்க நகைகளை கழற்றி தனது தாயின் கையில் கொடுத்தார்.
மேலும் 2 செல்போன்கள், ரூ 32 ஆயிரம் ரொக்கப்பணம், ஏடிஎம், ஆதார் கார்டு ஆகியவற்றையும் தாயிடம் ஒப்படைத்தார். இவை அனைத்தையும் வளர்மதி ஒரு பையில் போட்டு வைத்திருந்தார்.
இந்த நிலையில் மர்ம நபர்கள் அந்த நகை பணம் செல்போன்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வளர்மதி திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் அரசு ஆஸ்பத்திரி பெண்கள் வார்டில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X