search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    அரசு மருத்துவமனையில் பெண் நோயாளியிடம் நகை திருட்டு

    அரசு மருத்துவமனையில் பெண் நோயாளியிடம் நகை திருட்டு போன சம்பவத்தில் போலீசார் விசாரணை

    திருச்சி:

    திருச்சி துறையூர் எ.கீழபட்டி, நடுத்தெருவை சேர்ந்தவர் வளர்மதி (வயது 44). இவரின் மகள் பிரியங்கா உடல்நலம் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    மகளை அவரது தாயார் உடனிருந்து கவனித்து வந்தார். படுக்கையில் இருந்த காரணத்தால் பிரியங்காவின் 7 அரை பவுன் தங்க நகைகளை கழற்றி தனது தாயின் கையில் கொடுத்தார்.

    மேலும் 2 செல்போன்கள், ரூ 32 ஆயிரம் ரொக்கப்பணம், ஏடிஎம், ஆதார் கார்டு ஆகியவற்றையும் தாயிடம் ஒப்படைத்தார். இவை அனைத்தையும் வளர்மதி ஒரு பையில் போட்டு வைத்திருந்தார்.

    இந்த நிலையில் மர்ம நபர்கள் அந்த நகை பணம் செல்போன்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வளர்மதி திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் அரசு ஆஸ்பத்திரி பெண்கள் வார்டில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×