என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலம் கோட்டத்தில் 16 ரெயில்களில் மீண்டும் முன்பதிவு இல்லா பெட்டிகள்
Byமாலை மலர்16 March 2022 7:02 AM GMT (Updated: 16 March 2022 7:02 AM GMT)
சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட 16 ரெயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
சேலம்:
கொரோனா முதல் அலை பரவலை தடுக்கும் வகையில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகள் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.
கொரோனா தொற்று பரவல் குறைய குறைய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் படிப்படியாக மீண்டும் இயங்கத் தொடங்கின. கூட்டத்தை தவிர்க்க அதில், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது.
பெரும்பாலான ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டது. மேலும், முன்பதிவு இல்லாமல் பெட்டிகளில் பயணிக்க முடியாத நிலையும் இருந்தது.
இந்நிலையில், கொரோனாவுக்கு முந்தைய கட்டணத்துடன் ரெயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லா பெட்டிகளை பழையபடி இணைத்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து தற்போது குறிப்பிட்ட பெட்டிகளை முன்பதிவு இல்லா பெட்டிகளாக மீண்டும் இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது,
சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட 16 ரெயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பயணிகளின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். அவர்கள் முன்பதிவுவை ரத்து செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும் என்றனர்.
கொரோனா முதல் அலை பரவலை தடுக்கும் வகையில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகள் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.
கொரோனா தொற்று பரவல் குறைய குறைய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் படிப்படியாக மீண்டும் இயங்கத் தொடங்கின. கூட்டத்தை தவிர்க்க அதில், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது.
பெரும்பாலான ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டது. மேலும், முன்பதிவு இல்லாமல் பெட்டிகளில் பயணிக்க முடியாத நிலையும் இருந்தது.
இந்நிலையில், கொரோனாவுக்கு முந்தைய கட்டணத்துடன் ரெயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லா பெட்டிகளை பழையபடி இணைத்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து தற்போது குறிப்பிட்ட பெட்டிகளை முன்பதிவு இல்லா பெட்டிகளாக மீண்டும் இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது,
சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட 16 ரெயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பயணிகளின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். அவர்கள் முன்பதிவுவை ரத்து செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X