என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அமைச்சர் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்
Byமாலை மலர்15 March 2022 10:47 AM GMT (Updated: 15 March 2022 10:47 AM GMT)
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திருச்செந்தூர், உடன்குடி ஒன்றிய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர், உடன்குடி ஒன்றியத்தை சேர்ந்த ரஜினி மக்கள் மன்றத்தினர் தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதன்படி திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மாணிக்கம், உடன்குடி ஒன்றிய செயலாளர் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் திருச்செந்தூர் ஒன்றிய துணை செயலாளர்கள் நடேஷ், நமச்சிவாயம், கந்தசாமிபுரம் மன்ற தலைவர் செந்தில்வேல், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்ட 25-க்கும் மேற் பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் நகர்மன்ற தலைவர் சிவஆனந்தி, தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், நகராட்சி துணை தலைவர் செங்குழிரமேஷ், நகர பொறுப்பாளர் வாள்சுடலை, நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், சுதாகர், ஆனந்த ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந் தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X