search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெல்லை மாவட்டத்தில் இளம்பெண், முதியவர் ‘திடீர்’ சாவு

    நெல்லை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் நடைபெற்ற சம்பவங்களில் இளம்பெண், முதியவர் திடீரென இறந்துள்ளனர்.
    நெல்லை:
     
    மேலப்பாளையம் ராஜா நகர் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா (வயது 26).

    இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக சத்யா சமையல் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தார். மாடசாமி அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியி லேயே சத்யா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மேலப்பாளை யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சத்யாவிற்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

    அம்பை அம்மன் கோவில் தெருவை சேர்ந் தவர் பாபநாசம் (வயது 60). இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பாபநாசம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×