search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    வீட்டு தோட்டத்தில் மின்சாதன பொருட்கள் திருடிய வாலிபர் கைது

    விழுப்புரம் அருகே வீட்டு தோட்டத்தில் மின்சாதன பொருட்களை திருடியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே வளவனூர் போலீஸ் சரகம் கரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது வீட்டு தோட்டத்தில் வீட்டில் வேலை செய்வதற்காக வாங்கி வைக்கப்பட்ட எலக்ட்ரிக் வயர்கள் இருந்தது.

    இந்த வயர் அடிக்கடி காணாமல் போனது இதுபற்றி பாலமுருகன் வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து திருடனை பிடிக்க நோட்டமிட்டனர்.

    அப்போது மீண்டும் திருட வந்த போது ஒருவர் சிக்கினார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவரது பெயர் கோபாலகிருஷ்ணன், கரைமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் என தெரிய வந்தது.
    Next Story
    ×