என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ராஜாக்கமங்கலத்தில் வெடிவிபத்தில் பலியான மாணவியின் தந்தை கைது
Byமாலை மலர்15 March 2022 5:09 AM GMT (Updated: 15 March 2022 5:09 AM GMT)
ராஜன் வீட்டில் பட்டாசு தயாரிப்பதற்காக வெடிபொருட்களை வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து ராஜாக்கமங்கலம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் அருகே ஆறுதெங்கன்விளையை சேர்ந்தவர் ராஜன் (வயது 40).
கூலித் தொழிலாளியான இவர் வீட்டில் பட்டாசு தயாரிக்கும் தொழிலையும் நடத்தி வருகிறார் இவருக்கு தேன்மொழி(13), வர்ஷா (10) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் தேன்மொழி 8-ம் வகுப்பும், வர்ஷா 5-ம் வகுப்பும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். ராஜன் திருவிழாக்களுக்கு பட்டாசு தயாரிப்பதற்காக வெடிமருந்தை தமது வீட்டின் அருகில் உள்ள சாய்வு அறையில் வைத்திருந்தார்
ராஜன் வீட்டில் முயலும் வளர்த்து வருகிறார். நேற்று இரவு முயல்களுக்கு இரை வைப்பதற்காக வர்ஷா அந்த பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து வெடித்து சிதறியது. வெடிமருந்து வெடித்ததில் அந்த அறை இடிந்து விழுந்தது. மேலும் வர்ஷாவும் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டு பலியானார். அவரது தாயார் பார்வதிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராஜாக்கமங்கலம் போலீசார் விரைந்து வந்து வர்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் ராஜன் வெடிபொருட்களை வீட்டில் பட்டாசு தயாரிப்பதற்காக வைத்திருந்தது தெரியவந்தது ராஜாக்கமங்கலம் போலீசார் ராஜனை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் காந்திமதி மேல் விசாரணை செய்து வருகிறார்.
கூலித் தொழிலாளியான இவர் வீட்டில் பட்டாசு தயாரிக்கும் தொழிலையும் நடத்தி வருகிறார் இவருக்கு தேன்மொழி(13), வர்ஷா (10) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் தேன்மொழி 8-ம் வகுப்பும், வர்ஷா 5-ம் வகுப்பும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். ராஜன் திருவிழாக்களுக்கு பட்டாசு தயாரிப்பதற்காக வெடிமருந்தை தமது வீட்டின் அருகில் உள்ள சாய்வு அறையில் வைத்திருந்தார்
ராஜன் வீட்டில் முயலும் வளர்த்து வருகிறார். நேற்று இரவு முயல்களுக்கு இரை வைப்பதற்காக வர்ஷா அந்த பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து வெடித்து சிதறியது. வெடிமருந்து வெடித்ததில் அந்த அறை இடிந்து விழுந்தது. மேலும் வர்ஷாவும் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டு பலியானார். அவரது தாயார் பார்வதிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராஜாக்கமங்கலம் போலீசார் விரைந்து வந்து வர்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் ராஜன் வெடிபொருட்களை வீட்டில் பட்டாசு தயாரிப்பதற்காக வைத்திருந்தது தெரியவந்தது ராஜாக்கமங்கலம் போலீசார் ராஜனை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் காந்திமதி மேல் விசாரணை செய்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X