search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழிவுநீர் அகற்றம்
    X
    கழிவுநீர் அகற்றம்

    சாலையில் தேங்கிய கழிவுநீர்

    ராமேசுவரத்தில் சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்ற நகர்மன்ற துணைத்தலைவர் உத்தரவிட்டார்.
    ராமேசுவரம்

    ராமேசுவரம் நகராட்சிக்கு உட்பட்ட முத்துராமலிங்கதேவர் நகர்பகுதியில் கடந்த சில நாட்களாக சாலைகளில் கழிவுநீர் வெளியேறி தேங்கிநின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நகர்மன்ற துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தியிடம் புகார் அளித் தனர். இதைத்தொடர்ந்து துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி சம்பவ இடத்திற்கு நேரில்சென்று பார்வையிட்டு நகராட்சி ஊழியர்களை வரவழைத்து சாலைகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற உத்தரவிட்டார். 

    இதனைத் தொடர்ந்து முத்துராமலிங்கதேவர் நகர்பகுதியில் தேங்கிநின்ற கழிவுநீர் அகற்றப்பட்டது. நகர்மன்ற துணைத்தலைவரின் இந்த நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
    Next Story
    ×