என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வீட்டின் கதவை உடைத்து ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்14 March 2022 10:42 AM GMT (Updated: 14 March 2022 10:42 AM GMT)
ஏர்வாடி அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை:
வள்ளியூர் அருகே உள்ள ஏர்வாடியை அடுத்த மறுகால்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அப்பாத்துரை (வயது 60). விவசாயி.
இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஒரு துஷ்டி வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் பட்ட பகலில் அவரது வீட்டிற்கு வந்த கொள்ளையர்கள் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த 10 பவுன் தங்கநகை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளை யடித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
நேற்று இரவு வீடு திரும்பிய அப்பாத்துரை, கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் செயின், ரொக்க பணம் ரூ.15 ஆயிரம் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
இதுகுறித்து அப்பாத்துரை ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கைரேகைகள் பதிவாகி உள்ளதா என்றும் ஆய்வு நடத்தப்பட்டது. இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
வள்ளியூர் அருகே உள்ள ஏர்வாடியை அடுத்த மறுகால்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அப்பாத்துரை (வயது 60). விவசாயி.
இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஒரு துஷ்டி வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் பட்ட பகலில் அவரது வீட்டிற்கு வந்த கொள்ளையர்கள் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த 10 பவுன் தங்கநகை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளை யடித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
நேற்று இரவு வீடு திரும்பிய அப்பாத்துரை, கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் செயின், ரொக்க பணம் ரூ.15 ஆயிரம் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
இதுகுறித்து அப்பாத்துரை ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கைரேகைகள் பதிவாகி உள்ளதா என்றும் ஆய்வு நடத்தப்பட்டது. இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X