என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததற்கு மக்கள் ஒத்துழைப்பே காரணம்- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்
Byமாலை மலர்13 March 2022 10:48 PM GMT (Updated: 13 March 2022 10:48 PM GMT)
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 95 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 95 பேருக்கு தொற்று கண்டறியப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பே காரணம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 30-ந் தேதி அன்று கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக இருந்தது. அடுத்த நாளே பாதிப்பு 100-ஐ கடந்தது. அதையடுத்து தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-க்கும் மேல் இருந்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்கியதால் தற்போது கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X