என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லை, தென்காசி வழியாக -சென்னைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும்-தி.மு.க. மாவட்ட செயலாளர் கோரிக்கை
Byமாலை மலர்12 March 2022 10:23 AM GMT (Updated: 12 March 2022 10:23 AM GMT)
நெல்லை, தென்காசி வழியாக -சென்னைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தென்னக ரெயில்வே துணை பொது மேலாளர் மல்லையாவை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
தென்காசி:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தென்னக ரெயில்வே துணை பொது மேலாளர் மல்லையாவை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்டு உள்ளதால் தென்காசி மாவட்ட மக்களின் கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில், நெல்லையில் இருந்து வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாவூர்சத்திரம், தென்காசி வழியாக சென்னைக்கும், வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து சங்கரன்கோவில், தென்காசி, பாவூர்சத்திரம் வழியாக நெல்லைக்கும் ரெயில்களை உடனடியாக இயக்க வேண்டும்.
இதற்காக நெல்லையில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தாதர் மற்றும் பிலாஸ்பூர் ரெயில் பெட்டிகளை பயன்படுத்துவதன் மூலம் ரெயில்வேக்கு அதிகப்படியான வருமானம் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
அப்போது, மதுரை ரெயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா, குற்றாலம் பேரூராட்சி கவுன்சிலர் கிருஷ்ணா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சீவநல்லூர் சாமித்துரை ஆகியோர் உடனிருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட பொது துணை மேலாளர், பொது மேலாளரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், ரெயில்வேக்கு வருமானம் வரக்கூடிய வழித்தடம்தான் என்றும், உங்கள் கோரிக்கை நியாயமானது தான் என்றும் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X