என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலத்தில் சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
Byமாலை மலர்12 March 2022 10:00 AM GMT (Updated: 12 March 2022 10:00 AM GMT)
சேலத்தில் சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.
சேலம்:
சேலம் ஜாரி கொண்ட லாம்பட்டி மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் கோவிந் தன். இவரது மனைவி கலையரசி (வயது 65).
இவர் இன்று காலை 10.30 மணி அளவில் கொண்ட லாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது சாலையை கடக்க முயன்றார்.
அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கலையரசி மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கலையரசி தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது.இதைக் கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த கலையரசிமதியம் 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கொண்ட லாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த முத்து மகன் பிரகாஷ் (24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X