என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கராத்தே போட்டியில் பல்லடம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
Byமாலை மலர்11 March 2022 9:23 AM GMT (Updated: 11 March 2022 9:23 AM GMT)
திருப்பூரில் சோபுகாய் கராத்தே அமைப்பின் சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
பல்லடம்:
பல்லடத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றனர்.
இதுகுறித்து கராத்தே பயிற்சியாளர் சரவணன் கூறியதாவது:
திருப்பூரில் சோபுகாய் கராத்தே அமைப்பின் சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம், ஆந்திரா,கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கட்டா,குமிட்டோ,உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்லடம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 12 தங்கப்பதக்கம், 14 வெள்ளிப்பதக்கம், 20 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கன்சன் இந்தியா அறக்கட்டளை அமைப்பின் சார்பில் அவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. இதில் அமைப்பின் நிர்வாகி சதீஷ்குமார், கராத்தே பயிற்சி ஆசிரியர் மாணிக்கம், பயிற்சியாளர் சரவணன், மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்பட பலர் மாணவ மாணவிகளை வாழ்த்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X