search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் தின விழா
    X
    மகளிர் தின விழா

    உலக மகளிர் தின விழா

    பாபநாசம் கல்லூரியில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.
    பாபநாசம்:

    பாபநாசம் ஆர்.டி.பி கல்வி குழுமம் பாபநாசம் லயன்ஸ் கிளப் அன்னை மகளிர் மன்றம் இணைந்து நடத்திய உலக மகளிர் தின விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. 

    கல்வியியல் கல்லூரி முதல்வர் விமலா வரவேற்று பேசினார். கல்லூரி துணைத் தலைவர் ராபியா பேகம் கல்லூரி இயக்குனர் காரல்மார்க்ஸ் முன்னிலை வகித்தார். 

    கல்லூரி தாளாளர் தாவூத் பாட்சா தலைமை உரையாற்றினார்.
    விழாவில் பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு பூரணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அன்னை சாரதா மகளிர் மன்ற தலைவி தில்லைநாயகி சம்பந்தம், லயன்ஸ் கிளப் செயலாளர் செந்தில், பாபநாசம் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்குழலி கபிலன், புலத் தலைவர் சசிகுமார், மேல்நிலைப்பள்ளி முதல்வர் லதா, நர்சிங் பொறுப்பாளர் கலையரசி, முன்னாள் மாணவி ஷபிகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
     
    விழாவில் மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். 
    முடிவில் கல்லூரி துணை முதல்வர் தங்கமலர் நன்றி கூறினார்.
    Next Story
    ×