search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு விண்ணப்பம் வரவேற்பு

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் தாலுகா மற்றும் ஆயுதப்படை பணியிடங்களில் சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    தென்காசி:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் தாலுகா மற்றும் ஆயுதப்படை பணியிடங்களில் சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

     தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர் வாணையத்தின் மூலம் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் தாலுகா மற்றும் ஆயுதப்படை பணியிடங்களுக்கு  கடந்த 8-ந் தேதி முதல் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  www.tnusrb.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். 

    இவ்வாறு விண்ணப்பம் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் என்றால் தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நேரில் சென்றோ அல்லது 9789118638 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று பொதுநலன் கருதி தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
    Next Story
    ×