என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் பிறந்த 14 குழந்தைகள்
Byமாலை மலர்9 March 2022 8:26 AM GMT (Updated: 9 March 2022 8:26 AM GMT)
ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறந்தது. அதன்படி 10 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் என தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
உடுமலை:
உடுமலை வ.உ.சி., வீதியில் அரசு மருத்துவமனை செயல்படுகிறது.
இம்மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நோயாளிகள் வருகையும், குழந்தை பிறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது.
அவ்வகையில், சராசரியாக தினமும் 5 முதல் 7 குழந்தைகள் வரை பிறக்கின்றன. இந்நிலையில் கடந்த, 4-ந் தேதி 14 குழந்தைகள் பிறந்துள்ளன.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:-
மருத்துவமனையில் அன்றைய தினம் 14 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் மேற்கொள்ளப்பட்டது. ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறந்தது. அதன்படி 10 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் என தாயும் சேயும் நலமாக உள்ளனர். இந்த பிரசவத்தின் போது 10 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மீதமுள்ள 4 பேருக்கு மிகவும் சிரமமான சூழ்நிலையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களின் தீவிர முயற்சியால், நலமுடன் குழந்தைகள் பிறந்தன.
இவர்களை, கலெக்டர் வீனீத், மருத்துவப்பணிகள் துறை உயரதிகாரிகள் ஆகியோர் வாழ்த்தினர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X