search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி பலி
    X
    தொழிலாளி பலி

    திருவள்ளூர் அருகே கால்வாயில் மூழ்கி தொழிலாளி பலி

    திருவள்ளூர் அருகே கால்வாயில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பொலிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால்(வயது30).பெயிண்டர். இவர் சித்தேரி சுண்ணாம்பு கால்வாயில் குளித்துவிட்டு வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறி சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை.

    அவரை மனைவி மஞ்சுளா மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர்.அப்போது சித்தேரி கால்வாயில் தனபால் இறந்து கிடந்தார்.

    அவர் தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பது தெரிந்தது. இதுகுறித்து மணவாளநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினத்தை சேர்ந்தவர் கோபால், (48). மீனவர். இவர் புதுப்பட்டினம் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் துடுப்பு படகில் சென்று மீன்பிடித்தார். அப்போது தவறி விழுந்ததில் மீனுக்கு வீசிய வலையில் சிக்கி கோபால் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

    Next Story
    ×