search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    தமிழகத்தில் இன்று 261 பேருக்கு கொரோனா- 11 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை

    சென்னையில் இன்று 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் 37 பேருக்கும், செங்கல்பட்டில் 31 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 261 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று  292 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும்  குறைந்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 50 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. 

    அதிகபட்சமாக சென்னையில் இன்று 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் 37 பேருக்கும், செங்கல்பட்டில் 31 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் புதிய தொற்று பதிவாகவில்லை. 

    இன்று ஒரே நாளில் 705 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 9 ஆயிரத்து 78 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,011 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் 3,505 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
    Next Story
    ×