search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் தற்கொலை

    தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே சேவியர்புரத்தில் தந்தை பைக் வாங்கி தராததால் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    தக்கலை அருகே சேவியர்புரம் பட்டாணிவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரது மகன்நிஷாந்த் (வயது17). இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சக மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வருவதால் இவருக்கும் மோட்டார் சைக்கிளில் செல்ல ஆசை ஏற்பட்டது. 

    இதனால் தந்தையிடம் அடிக்கடி மோட்டார் சைக்கிள் வாங்கி கேட்டு தொந்தரவு செய்தார்.  தந்தை உனக்கு18 வயது முடியட்டும் அதன் பிறகு வாங்கி தருகிறேன் என்று கூறினார். இதை ஏற்க மறுத்த மகன் நேற்று மாலை வீட்டின் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு உள் சென்று விட்டார். 

    வெகுநேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த தந்தை வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது சேலையில் தூக்கு போட்டு தூக்கில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சி அடைந்த தந்தை இவரது உடலை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்றார். 

    இது சம்பந்தமாக தக்கலை காவல் நிலையத்தில் தந்தை ஸ்ரீதரன் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×