search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கபிலர்மலை வட்டாரத்தில் மின்மோட்டார் பம்புசெட்டிற்கு ரூ.10 ஆயிரம் மானியம்

    பரமத்திவேலூர் அருகே விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை மூலம் பழைய மின்சார மோட்டார் பம்புசெட்டிற்கு புதிய மின் மோட்டார் வழங்கப்படுகிறது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை மூலம் பழைய மின்சார மோட்டார் பம்புசெட்டிற்கு புதிய மின் மோட்டார் வழங்கப் படுகிறது. 

     மின்மோட்டார் பம்பு செட்டிற்கு மானியமாக 10 ஆயிரம் வரை வழங்கப் படுகிறது.  மானியம் பெற விவசா யிக்கு நிலம் 3 ஏக்கருக்குள் இருக்க வேண்டும்.

    சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று அவசியம். 10 வருடங்களுக்கு மேலாக இயங்கும் மின் மோட்டார்களை மாற்றி புதிய மின்மோட்டார் அமைத்து மின்சார சிக்கனத்திற்காக இந்த மானியம் வழங்கப்படுகிறது.  

    அதற்கு தேவையான ஆவணங்கள் விண்ணப்ப கடிதம், சிட்டா, அடங்கல், நிலவரைபடம், ஆதார் நகல், 2 புகைப்படம் போன்றவையாகும்.
    Next Story
    ×