search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எல்லையம்மன் கோவிலில் உள்ள நந்திபெருமான், ஏகாம்பரேஸ்வரர், கோப்பணம் பாளையத்தில் பரமேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில்
    X
    எல்லையம்மன் கோவிலில் உள்ள நந்திபெருமான், ஏகாம்பரேஸ்வரர், கோப்பணம் பாளையத்தில் பரமேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில்

    சிவன் கோயில்களில் மாசி மாத பிரதோஷ வழிபாடு

    பரமத்திவேலூர் பகுதி சிவன் கோயில்களில் மாசி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் மாசிமாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. 

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார் . பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

     இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர், அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன் ,அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரருக்கு மாசி மாத சோமவார பிரதோஷத்தினை முன்னிட்டு பலவகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பிறை அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

    அதேபோல் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் மாசிமாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். 
    Next Story
    ×