search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமேசுவரத்தில் இருந்து ஜெயஜோதிலிங்க யாத்திரை வாகனம் இன்று புறப்பட்டு சென்றது.
    X
    ராமேசுவரத்தில் இருந்து ஜெயஜோதிலிங்க யாத்திரை வாகனம் இன்று புறப்பட்டு சென்றது.

    ராமேசுவரத்தில் இருந்து ஜெயஜோதி லிங்க யாத்திரை வாகனம் புறப்பாடு

    மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரத்தில் இருந்து ஜெயஜோதி லிங்க யாத்திரை வாகனம் புறப்பட்டுச் சென்றது.
    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து ஜெயஜோதிலிங்க யாத்திரை வாகன யாத்திரை தொடங்கப்பட்டது. இந்த வாகனத்தில் 9அடி உயரத்தில் ஜோதிலிங்கம் வைக்கப்பட்டிருந்தது. அதுபோல 12 சிறிய ஜோதிலிங்கம் வைக்கப்பட்டிருந்தது. 

    இந்த யாத்திரை வாகனம் இந்தியாவிலுள்ள 12ஜோதிர்லிங்கம் அமைந்துள்ள கோவிலுக்கு சென்று அங்கு சிறப்பு பூஜைகள் செய்து ஒவ்வொரு சிறிய ஜோதிலிங்கத்தை வைத்து செல்ல உள்ளனர்.

    இந்த வாகனம் 15மாநிலங்கள் கடந்து 9ஆயிரத்து500 கிலோமீட்டர் தூரத்தில் 48நாள்கள் சென்று 12 ஜோதிலிங்கம் அமைந்துள்ள கோவிலுக்கு சென்று அங்கு ஒவ்வொரு ஜோதிலிங்கத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    இதனைத்தொடர்ந்து இறுதியாக இமாச்சாலபிரதேசம் பகுதியில் புதிதாக கட்டப்படும் சிவன்கோவிலில் இந்த சிவலிங்கத்தை நிறுவ திட்டமிட்டுள்ளனர்.
    Next Story
    ×