search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கோவையில் 1,050 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

    கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    கோவை:

    கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள்  தடாகம் ரோடு கணுவாய் அருகில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது மதன்குமார் என்பவர் ரேசன் அரிசியை கணுவாய் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி வடமாநிலத்திலிருந்து வந்து வேலை பார்க்கும் நபர்களுக்கு அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் அந்த  பகுதியில்  பதுக்கி வைத்திருந்த  1050 கிலோ   ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மதன்குமாரை   தேடி வருகின்றனர்.
    Next Story
    ×