என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
களக்காட்டில் ஒற்றை இலக்கத்தில் ஓட்டுகள் பெற்ற அரசியல் கட்சி வேட்பாளர்கள்
Byமாலை மலர்24 Feb 2022 9:36 AM GMT (Updated: 24 Feb 2022 9:36 AM GMT)
களக்காடு நகராட்சியில் நடந்து முடிந்த தேர்தலில் முக்கிய கட்சிகளான அ.தி.மு.க., அ.ம.மு.க., பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிலர் ஒற்றை இலக்கத்தில் ஓட்டுகள் பெற்றுள்ளனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு நகராட்சி 2-ம் வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பால்ராஜ் 5 ஓட்டுகளும், 3-ம் வார்டில் பா.ஜ.க.சார்பில் போட்டியிட்ட குமார் 6 ஓட்டுள் மட்டுமே பெற்றுள்ளனர்.
12-ம் வார்டில் மக்கள் நீதி மையம் சார்பில் களம் இறங்கிய குமார் 6 ஒட்டுகளும், 13-ம் வார்டில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ஜெயக்குமார் 3 ஓட்டுகளும், 14-ம் வார்டில் பகுஜன் சமாஜ் வேட்பாளராக களத்தில் இறங்கிய ராஜ்குமார் 6 ஓட்டுகள் பெற்றுள்ளனர்.
17-ம் வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட முகம்மது உஸ்மான் 4 ஒட்டுகளும், 19-ம் வார்டில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்ட கணேசன் 4 ஓட்டுகளும், 20-ம் வார்டில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட புஷ்பலீலா 3 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.
21-ம் வார்டில் அ.ம.மு.க. வேட்பாளரான இசைவாணி 7 ஓட்டுகளும், 22-ம் வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறங்கிய மெசில்டா 6 ஓட்டுகளும், 25-ம் வார்டில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட தேவிகா 6 ஓட்டுகளும், அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட மேகலா 6 ஓட்டுகளும் பெற்று தோல்வியடைந்துள்ளனர்.
இவர்கள் தங்களது டெபாசிட் தொகையையும் பறிகொடுத்துள்ளனர்.
முக்கிய கட்சிகளாக அ.தி.மு.க., அ.ம.மு.க., பா.ஜ.க. வினர் ஒற்றை இலக்கத்தில் ஓட்டுகள் பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடு நகராட்சி 2-ம் வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பால்ராஜ் 5 ஓட்டுகளும், 3-ம் வார்டில் பா.ஜ.க.சார்பில் போட்டியிட்ட குமார் 6 ஓட்டுள் மட்டுமே பெற்றுள்ளனர்.
12-ம் வார்டில் மக்கள் நீதி மையம் சார்பில் களம் இறங்கிய குமார் 6 ஒட்டுகளும், 13-ம் வார்டில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ஜெயக்குமார் 3 ஓட்டுகளும், 14-ம் வார்டில் பகுஜன் சமாஜ் வேட்பாளராக களத்தில் இறங்கிய ராஜ்குமார் 6 ஓட்டுகள் பெற்றுள்ளனர்.
17-ம் வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட முகம்மது உஸ்மான் 4 ஒட்டுகளும், 19-ம் வார்டில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்ட கணேசன் 4 ஓட்டுகளும், 20-ம் வார்டில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட புஷ்பலீலா 3 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.
21-ம் வார்டில் அ.ம.மு.க. வேட்பாளரான இசைவாணி 7 ஓட்டுகளும், 22-ம் வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறங்கிய மெசில்டா 6 ஓட்டுகளும், 25-ம் வார்டில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட தேவிகா 6 ஓட்டுகளும், அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட மேகலா 6 ஓட்டுகளும் பெற்று தோல்வியடைந்துள்ளனர்.
இவர்கள் தங்களது டெபாசிட் தொகையையும் பறிகொடுத்துள்ளனர்.
முக்கிய கட்சிகளாக அ.தி.மு.க., அ.ம.மு.க., பா.ஜ.க. வினர் ஒற்றை இலக்கத்தில் ஓட்டுகள் பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X