search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவல்துறை துணைதலைவர் சரவணசுந்தருடன் பாராட்டு பெற்ற போலீசார்.
    X
    காவல்துறை துணைதலைவர் சரவணசுந்தருடன் பாராட்டு பெற்ற போலீசார்.

    சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு

    கோவில் கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை திருச்சி டி.ஐ.ஜி. சரவணசுந்தர் பாராட்டினார்.
    திருச்சி:

    உப்பிலியபுரம்  ஒன்றியம் எரகுடி ஊராட்சி பிரதான சாலையில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீவரத ராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி 2ந்தேதி  மர்ம நபர் கோயில் மதில் சுவரில் ஏறிக்குதித்து  கோயிலின், உள்ளே உள்ள அர்த்தமண்டபம்,  மகாமண்டபம் பூட்டுகளை உடைத்து வெள்ளி மற்றும் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    இது தொடர்பாக உப்பிலியபுரம் போலீசார்  வழக்கு பதிவு, செய்து  சப்&இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இது சம்பந்தமாக கடந்த வாரம், எரகுடியைச் சேர்ந்த மதன் (வயது 24) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து இரண்டரை கிலோ வெள்ளி ஆபரணங்கள், 2 தங்கத் தாலிகள் மீட்கப்பட்டன.

    கொள்ளை சம்பவம் நடந்து 15 நாட்களில் குற்ற வாளியை கைது செய்து ஆபரணங்களை மீட்ட, சப் இன்ஸ்பெக்டர் கலைசெல்வன் தலைமையிலான குற்றப் பிரிவு போலீசாரை பாராட்டி,  திருச்சி சரக காவல்துறை  துணைத்தலைவர்  சரவணசுந்தர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
    Next Story
    ×