என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு 6 இடங்களே கிடைத்தது
Byமாலை மலர்23 Feb 2022 8:09 AM GMT (Updated: 23 Feb 2022 8:09 AM GMT)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு பேரூராட்சியில் மட்டுமே 6 இடங்கள் கிடைத்துள்ளது.
சென்னை:
மாநகராட்சி, நகராட்சி வார்டுகளில் அந்த கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மாநகராட்சி, நகராட்சியில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் நாம் தமிழர் கட்சி தோல்வியை தழுவியது.
அந்த கட்சிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சியில் மட்டுமே 6 இடங்கள் கிடைத்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 5 பேரூராட்சி வார்டுகளில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றது. இரணியல் (1-வது வார்டு), கப்பியரை (1-வது வார்டு), கல்லுக்கூட்டம் (8 மற்றும் 10-வது வார்டு), மருங்கூர் (10-வது வார்டு) ஆகிய பேரூராட்சிகளில் 5 வார்டுகளை கைப்பற்றியது.
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் 10-வது வார்டில் நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி கிடைத்தது.
மாநகராட்சி, நகராட்சி வார்டுகளில் அந்த கட்சியை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஒரு இடம்கூட கிடைக்காதது பரிதாபமே. அதிக பேரூராட்சி இடங்கள் இருந்தபோதிலும்கூட அந்த கட்சிக்கு வெறும் 6 வார்டுகளே கிடைத்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X