search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்குப்பதிவு எந்திரம்
    X
    வாக்குப்பதிவு எந்திரம்

    திருப்பூர் மாவட்டத்தில் ஒரு ஓட்டுக்கூட வாங்காத வேட்பாளர்கள்

    15 வார்டுகளை கொண்ட திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பேரூராட்சியில் 8 வார்டுகளில் பா.ஜ.க. தனித்து போட்டியிட்டது. இதில் 3 பா.ஜ.க. வேட்பாளர்கள் ஒற்றை இலக்கத்தில் மட்டும் வாக்குகளை பெற்றுள்ளனர்.
    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பேரூராட்சி 12-வது வார்டில் சுயேட்சையாக சிவக்குமார் என்பவர் போட்டியிட்டார். அவருக்கு உள்ளாட்சி தேர்தலில் ஒரு ஓட்டுக்கூட பதிவாகவில்லை. அதே போல் 4-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட லாவண்யா என்பவர் ஒரு வாக்கு மட்டும் வாங்கி உள்ளார்.

    15 வார்டுகளை கொண்ட திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பேரூராட்சியில் 8 வார்டுகளில் பா.ஜ.க. தனித்து போட்டியிட்டது. இதில் 3 பா.ஜ.க. வேட்பாளர்கள் ஒற்றை இலக்கத்தில் மட்டும் வாக்குகளை பெற்றுள்ளனர்.

    11-வது வார்டில் போட்டியிட்ட மோகன்ராஜ் 2 வாக்குகளும், 10-வது வார்டில் போட்டியிட்ட ஜெகதீஸ்வரன் 5 வாக்குகளும், 13-வது வார்டில் போட்டியிட்ட விக்னேஸ்வரன் 5 வாக்குகளும் பெற்றனர். மடத்துக்குளம் பேரூராட்சி 8-வது வார்டில் தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் செந்தில்குமார் ஒரு ஓட்டு கூட பெறவில்லை. இவரது வாக்கு அதே வார்டில் இருந்த போதும் இவர் ஓட்டு போடாத அதிசயம் அப்பகுதியில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×