search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆலங்குளத்தில் 5 வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி

    ஆலங்குளம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் சுயேட்சை-5, அ.தி.மு.க.-4, தி.மு.க.-3, தே.மு.தி.க.-2, காங்கிரஸ்-1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டத்தில் 17 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.  ஆலங்குளம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.

    இதில் சுயேட்சை வேட்பாளர்கள் 5 வார்டுகளிலும், தி.மு.க.-3, அ.தி.மு.க.-4 தே.மு.தி.க.-2, காங்கிரஸ்-1 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

    1-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ரவிக்குமார், 2-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் அன்னத்தாய், 3-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ஆரோக்கிய மேரி, 4-வது வார்டில் தே.மு.தி.க. வேட்பாளர் பழனிசங்கர்,

    5-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் பபிதா, 6-வது வார்டில் உமாதேவி (தி.மு.க.), 7-வது வார்டில் சுதா (தி.மு.க.), 8-வது வார்டில் அன்னக்கிளி (தி.மு.க.), 9-வது வார்டில் சுபாஷ் (அ.தி.மு.க.), 10-வது வார்டு சுந்தர் (சுயேட்சை),

    11-வது வார்டு வென்சிகா (காங்கிரஸ்), 12-வது வார்டு சாலமோன் (அ.தி.மு.க.), 13-வது வார்டு கணேசன் (சுயேட்சை), 14-வது வார்டு ஜான்ரவி (அ.தி.மு.க.), 15-வது வார்டு சின்னதங்கம் (தே.மு.தி.க.) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
    Next Story
    ×