search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.8½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

    நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.8½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனையானது.
    நாமக்கல்:

    நாமக்கல்- கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் இங்கு காய்கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

    அந்த வகையில் நேற்று 24½ டன் காய்கறிகள் மற்றும் 3¾ டன் பழங்கள் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.8 லட்சத்து 58 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 4,980 பேர் வாங்கி சென்றனர்.

    நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.10-க்கும், கத்தரிக்காய் கிலோ ரூ.60-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.20-க்கும், புடலங்காய் கிலோ ரூ.20-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.24-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.40-க்கும், கேரட் கிலோ ரூ.100-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.24-க்கும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.30-க்கும், இஞ்சி கிலோ ரூ.36-க்கும் விற்பனை செய்யப்பட்டன. 

    சின்ன வெங்காயம் கிலோ ரூ.36-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.44-க்கும் விற்பனை செய்யப்பட்டன. காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்ததால் அவற்றின் விலை சற்று குறைந்து காணப்பட்டதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக கடந்த வாரம் கிலோ ரூ.14-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று கிலோ ரூ.10-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் நேற்று கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
    Next Story
    ×