search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புகையிலை, லாட்டரி விற்ற 2 பேர் கைது

    தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்று வந்த எஸ்.வி.புரத்தை சேர்ந்த ராமசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    உடுமலை;

    உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் பகுதியில் போலீசார் வழக்கமான சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகளை விற்பனைக்கு எடுத்து சென்ற உடுமலை பெரியபட்டியைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 42) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

    அவரிடமிருந்து 101 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்று வந்த எஸ்.வி.புரத்தை சேர்ந்த ராமசாமி ( 50 )என்பவரை கைது செய்து அவரிடமிருந்த லாட்டரி சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
    Next Story
    ×