என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருச்சி மாநகரில் 3000 ஆதரவற்றவர்களின் உடல்களை தகனம் செய்த தூய்மை பணியாளர்
Byமாலை மலர்29 Jan 2022 6:45 AM GMT (Updated: 29 Jan 2022 6:45 AM GMT)
திருச்சி மாநகரில் 3000 ஆதரவற்றவர்களின் உடல்களை தூய்மை பணியாளர் தகனம் செய்துள்ளார்.
திருச்சி:
திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளராக இருப்பவர் ஏ. நாகராஜன். 49 வயது நிரம்பியுள்ள இவருக்கு திருச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அடையாளம் தெரியாத ஆதரவற்றவர்களின் உடல்களை தகனம் செய்யும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை இன்முகத்துடன் நாகராஜன் நிறைவேற்றி வருகிறார். கடந்த 15 ஆண்டுகளில் அடையாளம் தெரியாத விபத்தில் இறந்தவர்கள், சிக்குன் குனியா, டெங்கு, கொரோனா ஆகிய தொற்றுநோய்களில் மடிந்த 3000 பேரின் உடல்களை கொண்டு சென்று மின்மயானங்களில் தகனம் செய்துள்ளார்.
இதுபற்றி நாகராஜன் கூறும்போது, மக்களுக்கு சேவை செய்ய அரசு ஊழியராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இந்த வேலை எனக்கு மனநிறைவை தருகிறது. ஆகவே மேற்கண்ட வேலையை தொய்வின்றி, அச்சமின்றி செய்து வருகிறேன் என்கிறார். இவரது அன்றாட வேலையே திருச்சி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் இருந்தே தொடங்குகிறது.
நாளும் அரசு ஆஸ்பத்திரி காவல்நிலையத்தில் ஆதரவற்றவர்களின் உடல்கள் இருக்கிறதா? என கேட்டறிந்து அதனை ஆம்புலன்சில் ஏற்றி சென்று மின்மயானத்தில் தகனம் செய்துவிடுகிறார். மேலும் நகராஜன் கூறும்போது, இப்போதெல்லாம் கோவிட் தொற்றாளர்களின் உடல்களை தகனம் செய்ய அதிகம் எடுத்து செல்கிறேன். இந்த நேரத்தில் அதிகம் வீட்டின் வெளியே படுத்து தூங்கிவிடுவேன். எப்போதும் குளிக்காமல் வீட்டுக்குள் செல்வதில்லை என்றார்.
திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளராக இருப்பவர் ஏ. நாகராஜன். 49 வயது நிரம்பியுள்ள இவருக்கு திருச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அடையாளம் தெரியாத ஆதரவற்றவர்களின் உடல்களை தகனம் செய்யும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை இன்முகத்துடன் நாகராஜன் நிறைவேற்றி வருகிறார். கடந்த 15 ஆண்டுகளில் அடையாளம் தெரியாத விபத்தில் இறந்தவர்கள், சிக்குன் குனியா, டெங்கு, கொரோனா ஆகிய தொற்றுநோய்களில் மடிந்த 3000 பேரின் உடல்களை கொண்டு சென்று மின்மயானங்களில் தகனம் செய்துள்ளார்.
இதுபற்றி நாகராஜன் கூறும்போது, மக்களுக்கு சேவை செய்ய அரசு ஊழியராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இந்த வேலை எனக்கு மனநிறைவை தருகிறது. ஆகவே மேற்கண்ட வேலையை தொய்வின்றி, அச்சமின்றி செய்து வருகிறேன் என்கிறார். இவரது அன்றாட வேலையே திருச்சி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் இருந்தே தொடங்குகிறது.
நாளும் அரசு ஆஸ்பத்திரி காவல்நிலையத்தில் ஆதரவற்றவர்களின் உடல்கள் இருக்கிறதா? என கேட்டறிந்து அதனை ஆம்புலன்சில் ஏற்றி சென்று மின்மயானத்தில் தகனம் செய்துவிடுகிறார். மேலும் நகராஜன் கூறும்போது, இப்போதெல்லாம் கோவிட் தொற்றாளர்களின் உடல்களை தகனம் செய்ய அதிகம் எடுத்து செல்கிறேன். இந்த நேரத்தில் அதிகம் வீட்டின் வெளியே படுத்து தூங்கிவிடுவேன். எப்போதும் குளிக்காமல் வீட்டுக்குள் செல்வதில்லை என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X