search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சரவணசுந்தரம்
    X
    சரவணசுந்தரம்

    கோவை அருகே தொழில் போட்டியில் பைனான்சியர் கொலை

    பைனான்சியரின் தாயாரை மிரட்டிய 2 பேரை போலீசார் விசாரிக்கிறார்கள்.
    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் நாகம்மா புதூரைச் சேர்ந்தவர் சரவணசுந்தரம் (வயது 19). இவர் அந்த பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். நேற்று மதியம் சரவண சுந்தரம் அன்னூர் அருகே உள்ள மைல்கல் பஸ்நிறுத் தத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது பிள்ளையப்பம் பாளையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான தமிழ்ச் செல்வன் (26) மற்றும் அவரது நண்பர் ராஜராஜன் (20) ஆகியோர் மோட்டார்சைக்கிளில்  அங்கு வந்தனர். 

    அவர்கள் 2 பேரும் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரவணசுந்தரத்தை வெட்ட முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பி சரவணசுந்தரம் ஓடினார். ஆனால் அவரை விடாமல் 2 பேரும் துரத்தினர். சிறிது தூரம் ஓடிய நிலையில் சரவணசுந்தரத்தை மடக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சரவணசுந்தரம் துடிதுடித்து இறந்தார். 

    இதுபற்றி தகவல் அறிந்த மேட்டுப் பாளையம் டி.எஸ்.பி. பாலமுருகன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். இதற் கிடையே சரவணசுந்தரத்தை வெட்டி கொலை செய்த தமிழ்ச்செல்வனும், ராஜராஜனும் அன்னூர் போலீஸ்நிலையம் வந்து சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 

    பணம் கொடுக்கல்& வாங்கல் பிரச்சினையில் சரவணசுந்தரத்தை கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் சண்முக சுந்தரத்தின் உறவினர்கள் அதனை ஏற்க மறுத்தனர். சரவணசுந்தரம், கடந்த 8 ஆண்டுகளாக நிதி நிறுவனம் நடத்தி வந்த 2 பேரிடம் வேலை பார்த்துள்ளார். சமீபத்தில் அவர்களிடம் இருந்து பிரிந்து தனியாக நிதி நிறுவனம் நடத்தி இருக்கிறார். 

    சரவணசுந்தரத்தின் இந்த செயல் அந்த 2 பேருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேரும் சரவணசுந்தரத்தின் தாயாரை சந்தித்து மிரட்டி விட்டுச் சென்று இருக்கிறார்கள். இதனால் அவர்கள் 2 பேரின் தூண்டுதலில் தான் சரவண சுந்தரம் கொலை செய்யப்பட்டிருக்கிறார். 

    போலீசில் சரண் அடைந்த தமிழ்ச்செல்வன், ராஜராஜன் ஆகியோர் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என உற வினர்கள் தெரிவித்தனர். எனவே சரவண சுந்தரத்தை கொலை செய்ய தூண்டிய 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் கோவை& சத்தி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    போலீசார் அவர் களை சமாதானப்படுத்தி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதனை ஏற்று உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.     

    உறவினர்கள் மறியலை தொடர்ந்து சரவண சுந்தரத்தை கொலை செய்ய தூண்டியதாக கூறப்படும் 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் கொலைக்கு தூண்டியது உறுதி செய்யப் பட்டால் அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வரு கிறார்கள். 
    கொல்லப்பட்ட சரவண சுந்தரம் இந்து முன்னணியில் இருந்துள்ளார். சமீபத்தில் அந்த இயக்கத்தில் இருந்து தி.மு.க.வில் சேர்ந்துள்ளார். இந்தநிலையில் தான் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.  
    Next Story
    ×