search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    விழுப்புரம் அருகே செவிலியர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை

    விழுப்புரம் அருகே ஓய்வுபெற்ற செவிலியர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்டமங்கலம்:

    விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தை அடுத்துள்ள பாலப்பாடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முனிசாமி. இவரது மனைவி பார்வதி (வயது 62). இவர் ஓய்வுபெற்ற செவிலியர்.

    சம்பவத்தன்று பார்வதி காலை வீட்டைப் பூட்டிவிட்டு திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு சென்றார். பின்னர் நேற்று மாலை வீட்டுக்கு வந்து கதவை திறந்து பார்த்தார். அப்போது பின்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பீரோவை பார்த்தபோது அதில் இருந்த 10 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து பார்வதி கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×