என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலத்தில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
Byமாலை மலர்28 Jan 2022 10:01 AM GMT (Updated: 28 Jan 2022 10:01 AM GMT)
சேலத்தில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப் பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடி வளத்தி குமார் (வயது 52). இவர் மீது ஏற்கனவே அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையங்களில் 40-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடைசியாக கடந்த 15 தினங்களுக்கு முன் அன்னதானப்பட்டி 4 ரோடு பகுதியில் வாலிபர் ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதானார்.
இவர் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா, மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடாவிடம் வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்தார்.
இதை பரிசீலனை செய்த கமிஷனர், பிரபல ரவுடியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அன்னதானப் பட்டி போலீசார் ஆத்தூர் சிறையில் உள்ள அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சேலம் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X