search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சேலத்தில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

    சேலத்தில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    அன்னதானப்பட்டி:

    சேலம் அன்னதானப் பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடி வளத்தி குமார் (வயது 52).  இவர் மீது ஏற்கனவே அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையங்களில் 40-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    கடைசியாக கடந்த 15 தினங்களுக்கு முன் அன்னதானப்பட்டி 4 ரோடு பகுதியில்  வாலிபர் ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதானார்.

    இவர் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில்  கைது செய்ய  அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா, மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடாவிடம் வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்தார்.

    இதை பரிசீலனை செய்த கமிஷனர், பிரபல ரவுடியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அன்னதானப் பட்டி  போலீசார் ஆத்தூர் சிறையில் உள்ள  அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சேலம் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    Next Story
    ×