search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    மாணவியை கடத்தி சென்ற மாணவன் போக்சோவில் கைது

    மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் புதுக்கோட்டை சாலையில் தனியார் என்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் திருச்சி மட்டுமில்லாது பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் திருச்சி மாநகர் பகுதியை சேர்ந்த 17&வயது பெண் ஒருவர் படித்து வந்தார்.  அதே போல் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் செங்காட்டுப்பட்டியை சேர்ந்த சங்கீத் (20) என்பவரும் அங்கு கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்தார்.
     
    இதில் இருவரும் ஒரே வகுப்பு என்பதால் இருவருக்கிடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் இளம் பெண்ணின்  குடும்பத் தினருக்கு தெரியவந்ததை அடுத்து மகளை கண்டித்தனர். இதற்கிடையில் டிசம் பர் மாதம் 17&ந் தேதி இளம் பெண் மாயமானார்.

    இது குறித்து பெற்றோர் அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மாயமான இளம் பெண்ணை தேடிவந்தனர். இந்த நிலையில் கடந்த 24&ந் தேதி துறையூர் காவல்நிலையம் அருகே இளம்பெண் தனியாக நின்றிருப்பதை பார்த்த போலீசார், அவரை மீட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில்  அவர், மாயமான கல்லூரி மாணவி என்பது, அழைத்து சென்ற காதலன் சங்கீத் விட்டு விட்டு மாய மானதும் தெரியவந்து. அதனை தொடர்ந்து இளம் பெண்ணை மீட்டு திருச்சி காப்பகத்தில் ஒப்படைத்தனர்.  தொடர்ந்து மாணவன் சங்கீதை போலீசார் தேடி வந்த நிலையில் செங்காட்டு பட்டியில் இருப்பதாக தகவல் கிடைத்தன் அடிப்படையில் போலீசார் விரைந்து  சென்று சங்கீதை கைது செய்து திருச்சி கன்டோன்மென்ட் மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் கடத்தல் மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை  நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×